சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரெயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இரவு 11.40 மணி, 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக தாம்பரம்-கடற்கரை இடையே இரவு 11.20 மணி, 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை மற்றும் நாளை மறுநாள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story