தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 25-ம் தேதி கனமழை பெய்யக்கூடும்....!


தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 25-ம் தேதி கனமழை பெய்யக்கூடும்....!
x
தினத்தந்தி 22 Dec 2022 4:46 AM GMT (Updated: 22 Dec 2022 4:48 AM GMT)

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வரும் 25-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் 25-ம் தேதி கனமழை பெய்யக்கூடும். இது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி மேற்கு-தென்மேற்கு திசையில் இலங்கை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்பதால் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டும் என எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது.




Next Story