பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் ஏலம்


பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய் ஏலம்
x
தினத்தந்தி 5 July 2022 7:00 PM GMT (Updated: 5 July 2022 7:00 PM GMT)

பரமத்திவேலூர் சந்தையில் தேங்காய்ல ஏலம் நடந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.24.36-க்கும், குறைந்த பட்சமாக ரூ.18-க்கும், சராசரியாக ரூ.23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 290-க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 979 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ21.10- க்கும், சராசரியாக ரூ.‌23-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 870-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


Next Story