பேரீச்சம்பழ பண்ணையை கலெக்டர் ஆய்வு


பேரீச்சம்பழ பண்ணையை கலெக்டர் ஆய்வு
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரீச்சம்பழ பண்ணையை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் அத்தியூத்து கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் முகமது இர்சாத் என்ற பயனாளி தோட்டத்தில் ரூ.8790 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள கொய்யா செடிகளையும், ரூ.4,920 மானியத்தில் பயிரிடப்பட்டுள்ள மா செடிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

பின்னர் அழகன்குளம் கிராமத்தில் சிவானந்தம் தோட்டத்தில் ரூ.2 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையினையும், என்மனம்கொண்டான் கிராமத்தில் மானாவாரி பகுதி வளர்ச்சி திட்டம் ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்டு வரும் மா மற்றும் கால்நடைகள் ஆகியவற்றினையும், பேரீச்சம்பழம் பண்ணையினையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

அதன் பின்னர் அரியமான் கிராமத்தில் பழ வகைகளான கொய்யா, மா மற்றும் சப்போட்டா ஆகியவை வளர்க்கப்பட்டு வருவதையும், நொச்சியூரணி கிராமத்தில் மல்லிகை பூ தோட்டத்தினையும், பஞ்சந்தாங்கி கிராமத்தில் அத்திப்பழ தோட்டத்தினையும், தெற்குத்தரவை கிராமத்தில் இயற்கை விவசாயத்தின் மூலம் வளர்க்கப்பட்டு வரும் தேனீக்களையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story