திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x

அரசூர் ஊராட்சி பகுதியில் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சி பகுதிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வருகை தந்து வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அரசூர் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கடகுளம் பகுதியில் நடைபெறும் வேலைவாய்ப்பு உறுதி திட்ட கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அரசூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து குடிநீர் தேவை குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் தினேஷ் ராஜசிங், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, ஒன்றிய ஆணையர் ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், உதவி பொறியாளர்கள் அருணா, கீதா, பணித்திட்ட மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், பெத்தராஜ், ராஜேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டத்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



Next Story