புகார் பெட்டி


புகார் பெட்டி
x

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

விருதுநகர்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் அருகே பொட்டல்பட்டியில் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் பயணிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும்.

அந்தோணி, விருதுநகர்.

எரியாத மின்விளக்குகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரிவதில்லை. இதனால் பஸ் நிலையம் இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ளது. சட்டவிரோத சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் மின்விளக்குகளை எரிய தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். கண்ணன், சிவகாசி.

நடவடிக்கை தேவை

விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், விருதுநகர்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், வத்திராயிருப்பு.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், ராஜபாளையம்.


Related Tags :
Next Story