சுதந்திர தின பவள விழா நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம்


சுதந்திர தின பவள விழா நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம்
x

சோளிங்கரில் சுதந்திர தின பவள விழா நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கரில் சுதந்திர தின பவள விழா நடைபயணம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

சோளிங்கரில் சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நடைபயண யாத்திரை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பஞ்சாட்சரம், செயலாளர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி நடைபயணம் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த யாத்திரையில் மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் கிளைக் கழக நிர்வாகிகள், நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story