இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு


இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு - நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
x

திருப்பூர் அருகே இளம்பெண் வாங்கிய ரூ.200 செருப்புக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தை சேர்ந்தவர் சுபா(வயது 23). இவர் கடந்த 30-12-2021 அன்று இரவு திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஷாப்பிங் சிங்கப்பூர் கடையில் ரூ.200, ரூ.240 மதிப்பில் 2 ஜோடி செருப்பு வாங்கினார்.

இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்தநிலையில் ரூ.200-க்கு வாங்கிய செருப்பு, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது. உடனே சுபா அந்த செருப்பை எடுத்து கடைக்கு சென்று கேட்டுள்ளார்.

அவர்கள் செருப்பை சரி செய்து கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சரி செய்த பிறகு அந்த செருப்பை சுபாவால் அணியமுடியாத அளவுக்கு சிறியதாகி விட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் சுபா திருப்பூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். எதிர்தரப்பு ஆஜராகவில்லை.

இதைத்தொடர்ந்து செருப்புக்கான ரூ.200, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.20 ஆயிரம், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை சுபாவுக்கு, ஷாப்பிங் சிங்கப்பூர் கடையின் உரிமையாளர் சாதிக் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு தலைவர் தீபா, உறுப்பினர்கள் பாஸ்கர், ராஜேந்திரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.


Next Story