அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா


அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஊரக பகுதிகளில் 2 பேரும், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் ஒருவரும் என மொத்தம் 3 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்ட அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 292 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது. நேற்று மாவட்டத்தில் 64 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


Next Story