7 பேருக்கு கொரோனா பாதிப்பு


7 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

தேனி மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த 4 மாத காலமாக கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்ற நிலைமை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் மதுரையை சேர்ந்தவர். மற்றொருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தேனியில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Next Story