ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்


ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம்
x

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

திருப்பூர்

மூலனூர்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1¾ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி விற்பனை

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்தவிவசாயிகள் 670 பேர் விற்பனைக்காக பருத்தி கொண்டு வந்திருந்தனர்.

பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் வியாபாரிகள் ஒரு குவிண்டால் (100 கிலோ) அதிகபட்ச விலையாகரூ.11 ஆயிரத்து 879-ற்கும், குறைந்தபட்சவிலை ரூ.8 ஆயிரத்து 150-க்கும் விற்பனையானது.

ரூ.1¾ கோடிக்கு ஏலம்

அதன்படி மொத்தம் விற்பனைக்காக 5ஆயிரத்து 437 மூட்டை பருத்தி கொண்டு வரப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 75 லட்சத்து40 ஆயிரத்து 917-க்கு ஏலம் போனது.

இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்


Related Tags :
Next Story