பாப்பாரப்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு


பாப்பாரப்பட்டி அருகே  விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு
x

பாப்பாரப்பட்டி அருகே விபத்தில் காயமடைந்த விவசாயி இறந்தார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (வயது60). விவசாயி. இவரது மனைவி அபராஞ்சி (54). கடந்த 16-ந் தேதி காளி தனது மனைவி அபராஞ்சிருடன் மோட்டார் சைக்கிளில் அதியமான்கோட்டைக்கு சென்றார். அப்போது தட்டாரப்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும் மோதி கொண்டன. இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபராஞ்சி இறந்தார். சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story