பொம்மை வியாபாரி மயங்கி விழுந்து சாவு


பொம்மை வியாபாரி மயங்கி விழுந்து சாவு
x

காரிமங்கலம் அருகே பொம்மை வியாபாரி மயங்கி விழுந்து இறந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 58). இவர் கோவில் திருவிழாக்களில் பிளாஸ்டிக் பொம்மை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வந்தார். இவர் காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி ஊராட்சி குள்ளன் கொட்டாய் பகுதியை சேர்ந்த நண்பர் குப்பன் வீட்டுக்கு நேற்று வந்தார். அப்போது திடீரென பழனி மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பழனி ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story