தந்தையை பார்க்க வந்த மகள் விபத்தில் சாவு


தந்தையை பார்க்க வந்த மகள் விபத்தில் சாவு
x

உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தந்தையை பார்க்க வந்த மகள் விபத்தில் இறந்தார்.

தர்மபுரி

தர்மபுரி பி.ஆர்.சீனிவாச ராவ் தெருவில் நகைக்கடை வைத்திருப்பவர் ரகு. இவரது மனைவி மீனா (வயது 27). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே ரகுவின் பெரியப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான பென்னாகரத்தை அடுத்த வண்ணாத்திப்பட்டிக்கு ரகு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

இந்த நிலையில் மீனாவின் தந்தையான தர்மபுரி நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன் உடல்நலம் பாதிக்கப்பட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் தந்தையை பார்ப்பதற்காக மீனா தனது கணவருடன் இரவு மோட்டார் சைக்கிளில் தர்மபுரிக்கு வந்்தார். அப்போது மாங்கரை பிரிவு ரோட்டில் வந்தபோது குறுக்கே வந்த சைக்கிள் மீது மோதாமல் இருக்க ரகு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றார். இதில் நிலை தடுமாறி கணவன்-மனைவி 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மீனா மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ரகுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தந்தையை பார்க்க வந்த மகள் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story