கட்டிட மேஸ்திரி தவறி விழுந்து சாவு


கட்டிட மேஸ்திரி தவறி விழுந்து சாவு
x

நாமக்கல் அருகே கோழிப்பண்ணை கட்டுமான பணியின்போது தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

நாமக்கல் அருகே கோழிப்பண்ணை கட்டுமான பணியின்போது தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட மேஸ்திரி

நாமக்கல் அருகே உள்ள திண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். கோழிப்பண்ணை அதிபர். இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சேந்தமங்கலம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி பார்த்தசாரதி (வயது45) மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பணியின் போது பார்த்தசாரதி கால்தவறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். இங்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி தங்கமணி நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது தவறி விழுந்து கட்டிட மேஸ்திரி இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story