விபத்தில் விவசாயி சாவு


விபத்தில் விவசாயி சாவு
x

காரிமங்கலம் அருகே விபத்தில் விவசாயி இறந்தார்.

தர்மபுரி

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது35). விவசாயி. இவர் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் பெரியாம்பட்டி பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார் பூலாம்பட்டி அருகே சென்றபோது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story