காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு


காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி சாவு
x

நண்பர்களுடன் நீந்தி சென்ற போது காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி இறந்தார்.

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை செம்மனூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் தொப்பையாறு காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் போட்டி போட்டு கொண்டு ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு காவிரி ஆற்றில் நீந்தி சென்றனர். நடு ஆற்றில் சென்றபோது திடீரென செந்தில்குமார் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரும்பாலை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அவரை தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 2-வது நாளாக அவர்கள் செந்தில்குமாரை தேடினர். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story