தாக்குதலில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு


தாக்குதலில் படுகாயம் அடைந்த விவசாயி சாவு
x

தொப்பூர் அருகே தாக்குதலில் படுகாயம் அடைந்த விவசாயி இறந்தார். இதுதொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது45). விவசாயி. இவர் கடந்த 4-ந் தேதி உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற போது விஜய் என்பவர் மீது மோதியது. இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் மீண்டும் சரவணன் உறவினர் வீட்டில் இருந்து ஊத்துப்பள்ளத்திற்கு காரில் வந்த போது விஜய் தரப்பை சேர்ந்த 3 பேர் காரை வழிமறித்து சரவணனை தாக்கினர்.

இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஊத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (48), நவீன்குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் காமராஜ் (47) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story