மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் சாவு
x

கிருஷ்ணாபுரம் அருகே கார் உரசியதில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தர்மபுரி

கிருஷ்ணாபுரம் அருகே கார் உரசியதில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே நாயக்கன் கொட்டாய் பகுதியில் சாலையில் 2 பேர் நேற்று மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஒரு மோட்டார் சைக்கிள் மீது உரசி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சரத்குமார் (வயது 27), கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் (30) ஆகிய 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

2 பேர் சாவு

இதையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story