மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி சாவு


மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி சாவு
x

கடத்தூர் அருகே மாத்திரைகளை தின்ற பிளஸ்-2 மாணவி இறந்தார்.

தர்மபுரி

மொரப்பூர்:

சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். லாரி பட்டறை தொழிலாளி. இவரது மகள் தீபா (வயது16). மாணவி மணியம்பாடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். சம்பவத்தன்று மாணவி வாந்தி எடுத்துள்ளாள். இதை பார்த்த உறவினர்கள் மாணவியை கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவி அதிக அளவில் மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மாணவியை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் மாணவி பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story