கர்ப்பிணி திடீர் சாவு


கர்ப்பிணி திடீர் சாவு
x

பாப்பாரப்பட்டி அருகே கர்ப்பிணி திடீர் இறந்தார்.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். கட்டிட மேஸ்திரி. இவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வடுகம்பூண்டி கிராமத்தை சேர்ந்த சங்கீதா (வயது 19) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். காப்பிணியான சங்கீதாவுக்கு நேற்று திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் தனசேகர் மனைவியை நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை அழைத்து சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது சங்கீதா கர்ப்பமாக இருப்பதால் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே சங்கீதா திடீரென இறந்து விட்டார். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 7 மாதத்தில் கர்ப்பிணி இறந்ததால் தர்மபுரி உதவி கலெக்டர் சித்ராவிஜயன் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story