மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி


மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பலி
x

சூளகிரி அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி:

பீகார் மாநிலம், மடுவானி அடுத்த டால்பிட்வாரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் சவுபால் (வயது 21). இவர் சூளகிரி அருகே தங்கி குருபரப்பள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று அவர் தான் பணிபுரியும் ஓட்டலின் தண்ணீர் தொட்டி மீது ஏறினார். அப்போது நிலைதடுமாறிய அவர் அருகில் இருந்த மின் கம்பியை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஜெயப்பிரகாஷ் சவுபால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story