கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி


கார் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலி
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள பெருமாள் புதூரைச் சேர்ந்தவர் மாதவன் (வயது 48). அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் கிளையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன் தினம் இரவு மாதவன் தனது மனைவி வித்யாவுடன் (38) வெள்ளகோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளகோவில், புதிய பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் மாதவன் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மாதவன் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்தார். மனைவி வித்யாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாதவன் இறந்துவிட்டதாக தெரிவித்தார். வித்யா முத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story