சேலையில் தீப்படித்து பெண் சாவு


சேலையில் தீப்படித்து பெண் சாவு
x

ஓட்டப்பிடாரம் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் இறந்தார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சந்திரகிரி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் மகாவிஷ்ணு (வயது 39). குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த இவர், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இவருடைய மனைவி கவுதமி (25). இவர்களுக்கு 3 வயதில் லக்சன் என்ற மகன் உள்ளான். கடந்த 17-ந் தேதி கவுதமி வீட்டில் இருந்தபோது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக மண்எண்ணெய் பட்டுள்ளது.

இதை அறியாமல் அவர் பூஜை அறைக்கு சென்று விளக்கை பற்ற வைத்தார். அப்போது திடீரென சேலை தீப்பிடித்து எரிந்தது. இதை அறிந்த அவரது கணவர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கவுதமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கவுதமிக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகளே ஆவதால் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story