குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா செவ்வூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ரகுபதி (வயது 35). இவர் கடந்த மே மாதம் 30-ந் தேதி இரவு செவ்வூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வெள்ளையாண்டிப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரகுபதி உயிரிழந்தார். இதுகுறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story