குறைந்து கொண்டே வரும் கொரோனா தொற்று: 47 நாட்களுக்கு பிறகு பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்தது


குறைந்து கொண்டே வரும் கொரோனா தொற்று: 47 நாட்களுக்கு பிறகு பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்தது
x

குறைந்து கொண்டே வரும் கொரோனா தொற்று 47 நாட்களுக்கு பிறகு பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 576 ஆண்கள், 396 பெண்கள் என மொத்தம் 972 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 208 பேர், கோவையில் 110 பேர், செங்கல்பட்டில் 84 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 123 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் 446 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 47 நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 9 ஆயிரத்து 408 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 343 பேரும், கோவையில் 911 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story