ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தேவா, சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது பணி ஓய்வு பெறும் ஆபரேட்டர், தூய்மை பணியாளர்களுக்கு பணிக்கான ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.


Next Story