400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
திருக்கோவிலூர் அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெரிய ஏரி அருகே சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் கார்த்திகேயன்(வயது 32) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story