ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

இடிந்தகரை, கூத்தன்குழி பகுதியில் ரூ.65 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டினார்

திருநெல்வேலி

ராதாபுரம் ஒன்றியத்தில் உள்ள இடிந்தகரை மற்றும் கூத்தன்குழி ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அதாவது இடிந்தகரையில் சிமெண்டு சாலை, மீன்வலை கூடம், மீன் விற்பனை நிலையம், அங்கன்வாடி மையம், விஜயாபதி பஞ்சாயத்து குறிஞ்சிகுளத்தில் பஸ் நிறுத்தம், கூத்தன்குழியில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜா, மவுலின், படையப்பா முருகன், இசக்கி பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயராஜ், வளர்மதி, முருகேசன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி, மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் சூசை அந்தோணி, மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story