சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு


சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு
x

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவுகளில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய் படை பிரிவை பார்வையிட்டு, வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சிறுவர்கள், பெரியவர்கள் என 10 நபர்களை திறம்பட செயல்பட்டு கண்டுபிடித்தமைக்காகவும், கிராமங்கள் தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் காமராஜ், ரவிசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story