ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட குழு கூட்டம்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட குழு கூட்டம்
x

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வளாகத்தில் ஜாக்டோ -ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ரங்கசாமி, ராஜாங்கம், செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டத்தில் சென்னையில் வருகிற 10-ந் தேதி நடைபெறும் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் புதுக்கோட்டையிலிருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்றும், ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story