தொடர் மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு


தொடர் மழை காரணமாக  கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவு
x

தொடர் மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரத்தில் 2 நாட்கள் கூடி வருகிறது. அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்தது. இது ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. 150 எருமை மாடுகள், 250 பசு மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், பசு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. தமிழகத்தில் சில பகுதிகள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'தொடர் மழை காரணமாக சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் சந்தையில் மாடுகளை நிற்க வைத்து விலை பேசுவது, வாகனங்களில் மாட்டை ஏற்றிச்செல்வது உள்ளிட்ட பணிகள் சிரமமானது. இன்று (அதாவது நேற்று முன்தினம்) 60 சதவீத மாடுகளே விற்பனையானது' என்றனர்.


Next Story