குடிபோதையில் தவறி விழுந்து முதியவர் சாவு


குடிபோதையில் தவறி விழுந்து முதியவர் சாவு
x

சங்கராபுரம் அருகே குடிபோதையில் தவறி விழுந்து முதியவர் சாவு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த பொன்னன் மகன் பார்த்திபன்(வயது 60). விவசாய வேலை செய்து வந்த இவர் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் தனது குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதை அவரது மனைவி சாரதாம்பாள், மகன் சிலம்பரசன் ஆகியோர் தட்டிக் கேட்டபோது அவர்களை தாக்க முயன்றபோது வீட்டு வாசற்படி அருகே நிலை தடுமாறி பார்த்திபன் கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி சாரதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story