தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
x

தர்மபுரியில், இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் தொடங்கி நடக்கிறது. இந்த முகாமில் பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான படிப்புகளையும் முடித்த இளைஞர்கள், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்கிறார்கள். தனியார் துறை வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அவர்களுடைய பதிவு மூப்பின்படி அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story