அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு


அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
x

விருத்தாசலம் அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் வைத்திருந்த அறையில் நேற்று காலை சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு, விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள, சாரை பாம்பை உயிருடன் பிடித்து கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் விட்டனர். பள்ளி வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story