கண் சிகிச்சை முகாம்


கண் சிகிச்சை முகாம்
x

கல்லிடைக்குறிச்சியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பெரிய ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன், அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் சார்பில் இந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமினை அப்துல் மஜீத் தொடங்கி வைத்தார். முதன்மை முகாம் மேலாளர் ஆசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். விழி ஒளி ஆய்வாளர் சிஞ்சு கண் பரிசேதனை செய்தார். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story