தூக்க மாத்திரை சாப்பிட்ட விவசாயி சாவு


தூக்க மாத்திரை சாப்பிட்ட விவசாயி சாவு
x

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட விவசாயி இறந்தார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே குறும்பலாபேரி குலசேகரன் தெருவைச் சேர்ந்தவர் திருமலைபாண்டி (வயது 62). விவசாயியான இவர் உடநலம் பாதிக்கப்பட்டு தூக்கமில்லாமல் அவதிப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டு வந்தார். சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மயங்கிய அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி திருமலைபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story