பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

சேத்துப்பட்டு அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பழம் பேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 65), விவசாயி.

இவர் சம்பவத்தன்று பயிர்களுக்கு தண்ணீர் விடுவதற்காக நிலத்துக்குச் சென்றார்.

அப்போது அவரை பாம்பு கடித்துவிட்டது. இதனால் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜெயராமனின் மகன் ரமேஷ் சேத்துப்பட்டு போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story