மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்


மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
x

மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மத்திய அரசின் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெறக்கோரியும் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைதலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதோடு, மின்சார திருத்த சட்ட நகலை தீயிட்டு கொளுத்தினர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story