மின் சட்ட மசோதா நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்


மின் சட்ட மசோதா நகலை எரித்து விவசாயிகள் போராட்டம்
x

ஓமலூரில் மின் சட்ட மசோதா நகலை எரித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சேலம்

ஓமலூர்:-

மத்திய அரசின் மின் சட்ட மசோதாவை கண்டித்து ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஓமலூர் வட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் தங்கவேலு, அரியாக்கவுண்டர் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினா். வட்ட செயலாளர் அர்த்தனாரி, வட்ட பொருளாளர் வரதராஜன், வட்ட துணைச்செயலாளர் மோகன், மேச்சேரி ஒன்றிய தலைவர் மாது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்டக்குழு உறுப்பினர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சங்ககிரி தாலுகா அலுவலகம் முன்பு உதய்மின் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story