திருச்செங்கோட்டில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்


திருச்செங்கோட்டில்  பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்
x

திருச்செங்கோட்டில் பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பிரிதி ஊராட்சியில் பா.ஜ.க. நிர்வாகி விசுவநாதன் மற்றும் அவருடைய தாயார் சரஸ்வதி ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி வரவேற்றார். திருச்செங்கோடு நகர பார்வையாளர் மகேஸ்வரன், நகர பொது செயலாளர் அய்யப்பன், மாவட்ட பொது செயலாளர்கள் நாகராஜன், முத்துக்குமார், சேதுராமன், மாவட்ட பிரசார பிரவு தலைவர் ரமேஷ், ஓ.பி.சி. அணி மாவட்ட துணைத்தலைவர் ரஜினிகாந்த், தேசிய பொதுக் குழு உறுப்பினர் மனோகரன், மாநில நெசவாளர் அணித்தலைவர் பாலமுருகன் மற்றும் 50 பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து மாலையில் உண்ணாவிரத போராட்டம் முடித்து கொள்ளப்பட்டது.


Next Story