ஆற்றில் பெண் பிணம்


ஆற்றில் பெண் பிணம்
x

ஆற்றில் பெண் பிணம் கிடந்தது.

திருச்சி

லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அதை கண்டு லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மாலதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story