தீயில் கருகிய பெண் சாவு


தீயில் கருகிய பெண் சாவு
x

கருப்பூர் அருகே சமையல் செய்த போது விபத்து: தீயில் கருகிய பெண் இறந்தார்.

சேலம்

கருப்பூர்:

கருப்பூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளவரசன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஆர்த்தி (வயது 22). இவர் கடந்த 29-ந் தேதி வீட்டில் மண்எண்ணெய் ஸ்டவ்வில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. தீ உடல் முழுவதும் பரவியதால், அவர் அலறித்துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் தீயில் கருகிய ஆர்த்தியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்து வருகிறது.


Next Story