மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் சாவு


மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் சாவு
x

கணவருடன் சென்றபோது மோட்டார்சைக்கிள் விபத்தில் பெண் சாவு

திருவண்ணாமலை

ஆரணி

சந்தவாசலை அடுத்த கல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் செல்வராஜ். இவரின் மனைவி சுகுமாரி (வயது 42).

இருவரும் 21-ந்தேதி ஒரு மோட்டார்சைக்கிளில் ஆரணி-ஆற்காடு சாலையில் உள்ள ராணுவ கேண்டீனுக்கு சென்று, அங்கு பொருட்களை வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

ஆரணி - சேவூர் பைபாஸ் சாலையை அடுத்த பாலத்தின் அருகே சென்றபோது செல்வராஜிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகவும், அதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சுகுமாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியோடு மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று சுகுமாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் பலியான சுகுமாரிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Related Tags :
Next Story