பெண் பாலியல் பலாத்காரம்


பெண் பாலியல் பலாத்காரம்
x

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

காட்டுமன்னார்கோவில் அடுத்த முட்டம் அருகே உள்ள அழிஞ்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 29). இவர் 22 வயதுடைய இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண் அரவிந்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த பெண் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்- இன்ஸ்பெக்டர் இளவரசி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story