தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

கிருஷ்ணகிரியில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அடுத்த சின்ன மேலுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜோதிகா (வயது 20). இவருக்கும் பெத்த மேலுப்பள்ளியை சேர்ந்த ரவீந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 25-ந் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜோதிகா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2½ ஆண்டுகளில் பெண் இறந்துள்ளதால் இது குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story