சினிமா உதவி இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை


சினிமா உதவி இயக்குனர் தூக்குப்போட்டு தற்கொலை
x

பொன்னை அருகே சினிமா உதவி இயக்குனர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

பொன்னை அருகே சினிமா உதவி இயக்குனர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உதவி இயக்குனர்

பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 40). இவர் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் சினிமாத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து கடந்த 23-ந் தேதி, இவரது மனைவி சரஸ்வதி சென்னை சைதாப்பேட்டை போலீசில் கணவரை காணவில்லை என்று புகார் செய்துள்ளார். இது குறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சந்திரனை தேடி வந்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று பொன்னை அருகே உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில், தனியார் நிலத்தில் உள்ள ஒரு மரத்தில் சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் சந்திரனின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொன்னை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன சந்திரனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.


Next Story