போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது


போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
x

போதைப்பொருள் தடுப்பு சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று ஒரு கஞ்சா வியாபாரி மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருகுவிளை பகுதியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 45). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்ததால் இவரை போதைப் பொருள் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கலெக்டர் அரவிந்த், கஞ்சா வியாபாரி சுயம்புலிங்கத்தை போதைப்பொருள் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சுயம்புலிங்கத்தை கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தார்.


Next Story