பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்


பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x

பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள நேஷனல் இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் யுனைடெட் இந்தியா அதிகாரிகள் சங்க தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் ராஜமகேந்திரன் முன்னிலை வகித்தார்.இதில் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையில் விரைந்து தீர்வு காண வேண்டும். காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story