100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி


100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி
x

100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த செண்பகராயநல்லூரில் தமிழக அரசின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சதாசிவம் கலந்துகொண்டு 100 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்புள்ள ஆடுகளை வழங்கினார். கால்நடை துறை துணை இயக்குனர் அசான் இப்ராகிம், மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், கரியாப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story